Tuesday 26 July 2022

Arappaneeswarar Sathagam - யாரு புண்ணியவான்? நல்ல பிள்ளைகளின் இலக்கணம்!


 Arappaleeswarar Temple, Kolli Hills, TN


தங்குலம் விளங்கிடப் பெரியோர்கள் செய்துவரு
தருமங்கள் செய்து வரலும்,
தன்மமிகு தானங்கள் செய்தலும், கனயோக
சாதகன் எனப்படுதலும்,
மங்குதல் இலாததன் தந்தைதாய் குருமொழி
மறாதுவழி பாடு செயலும்,
ழிவழி வரும்தமது தேவதா பத்திபுரி
மார்க்கமும், தீர்க்கா யுளும்,
இங்கித குணங்களும், வித்தையும், புத்தியும்,
ஈகையும், சன்மார்க் கமும்
இவையெலாம் உடையவன் புதல்வனாம்; அவனையே
ஈன்றவன் புண்ய வானாம்;

அங்கச விரோதியே! சோதியே! நீதிசேர்
அரசன்எம தருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!"

-- 

அம்பலவாணக் கவிராயர் இயற்றிய அறப்பளீசுர சதகம்

No comments:

Post a Comment